Thursday, November 28, 2013

ஓம் எப்படி உச்சரிக்க வேண்டும்

ஓம் எப்படி உச்சரிக்க வேண்டும் ???

+ம் = ஓம் om
வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.
இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ம்மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும்..

ஓம் என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.

"
ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ"

—(
மய விஞ்ஞானம்)

ஓம் என்பதன் மிக சுருக்கமான/நுட்பமான பொருள் = "உயிர்களுக்கும் இறைவனுக்கும் உறவு!"
ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்! சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள், சைனாவில் கூட "ஓம்" சொல்வார்கள்

, , ம் என்று மூன்றெழுத்துக்கள் கொண்டது போல் இருப்பினும், ஓம் என்பது ஓரெழுத்து தான் (ஏகாட்சரம்)! தமிழில் ஓங்காரம்! பிரணவம் என்று வடமொழியில் சொல்வார்கள்! 

*
= இறைவன் (""கர முதல எழுத்தெல்லாம்! அவனைக் குறிப்பதெல்லாம் ""-காரமாய்த் தான் இருக்கும்)
*
= நாம் (எம், உம், நம், நாம் என்று நம்மைக் குறிப்பதெல்லாம் ""-காரமாய்த் தான் தொக்கி நிற்கும்)

அந்த ""-வையும், இந்த ""-வையும் எப்படிச் சேர்ப்பது? - "" கொண்டு சேர்க்கணும்! ""றவைக் கொண்டு சேர்க்கணும்!

*
= உறவு! ""கார-""காரத்தை இணைக்கும் உறவு! 

உந்தன்னோடு =
உறவேல் =
நமக்கு = ம்
+ + ம் = ஓம்!

*
= பரமாத்மா
*
= உறவு
*
ம் = ஜீவாத்மா



ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!!!

ஓம் என்பது ப்ரணவம்
ப்ரணவம் என்பது எந்த ஒரு ஒலிக்கும் காரணமாக இருப்பது ப்ரணவம் எனப்படும். படைப்பு அனைத்தும் ஓம் என்ற சொல்லில் அடங்கும் ஓம் படைப்பின் ரகசியம் ஆகும் ஓம் என்பதை பிரித்தால் அ + + ம் என்று பிரிக்கலாம்.

அ என்பது படைத்தல் / பிரம்மா / இறந்தகாலம்.
உ என்பது காத்தல் / விஷ்ணு / நிகழ்காலம்
ம் என்பது அழித்தல் / சிவன் / எதிர்காலம்

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் மூன்று தொழிழுக்கு உட்பட்டு இருக்கும். அதாவது உலகத்தில் தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்தே ஆக வேண்டும் என்பது நியதி . அதனை விளக்குவதே ஓம் என்றும் ப்ரணவம்.

இந்த பிரபஞ்சமும் ஓம் என்பதில் அடங்கும் அ வில் தோன்றி உ வில் இருந்து ( வாழ்ந்து) ம் ல் முடியும் ( மறையும் ). அதனால் தான் நமது ரிஷிகள் ஓம் என்னும் பிரணவமே மொத்த பிரபஞ்சமாக இருக்கிறது என்று கண்டார்கள் .

நாம் சாதாரணமாக எந்த ஒரு சத்தத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த மூன்று தொழில்கள் வருவதை அறியலாம் . மூன்று தொழில்கள் என்பது பிரணவமே. பிரம்மத்தின் நாதம் ப்ரணவம். பிரபஞ்சத்தின் இயக்கத்தை சப்தத்தில் குறிப்பது தான் ஓம்
ஓம் என்கிற ப்ரணவ மந்திரம் இல்லாமல் எந்த ஒரு மந்திரமும் இல்லை ஓம்-ன் சிறப்பை நமது வேதங்களும் புராணங்களும் கூறியிருக்கின்றன.

Reverend Richard Coles explores the world of spiritual sound and meditation and tries to understand what it is about certain sounds and chants which gives practitioners a sense of proximity to the Divine. He tunes into the Om, a sacred sound in several religions including Hinduism, Sikhism, Jainism and Buddhism and its vibration is believed by many to be healing. He speaks to the Director for the Oxford Centre for Hindu Studies, Shaunaka Rishi Das, who states that Meditation is something we all do from childhood, for example when we are focussing on something we want to buy and how to get it or when we kiss, but that it can be used for greater ends
Richard meets neuroscientist Dr Alan Watkins of Imperial College who has worked with the Dalai Lama and his team in Tibet and found that people who meditate together showed signs of "entrainment" in their brain activity, the same phenomenon that allows flocks of birds or shoals of fish to move together. Is this the sense of "one-ness" people talk about when meditating?
Richard speaks to the expert in comparative religion Martin Palmer who suggests that there is nothing inherently sacred about chanting, but that is a trick whose powers can be harnessed by despots as well as for good.
Richard talks to Jem Finer of The Pogues, writer of their greatest hit The Fairytale of New York about his Longplayer project, a musical composition based on the meditative sound of Tibetan Singing Bowls and designed to play continuously for 1000 years.
Richard also hears from the nuns at Saint Cecilia's Abbey on the Isle of Wight who sing Gregorian Chant everyday in its original form. What does the power of the Mother Note in Gregorian chant have in common with the mantra recitations of the Hindu tradition?



Sunday, November 24, 2013

SIVAN

சிவனை பற்றி அப்துல்காலம்

«`````````````````````````````
30 இலட்சம் விஞ்ஞானிகளில் ஒருவரான அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்ச்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், அதன் ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது மேலும் தமிழ் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிவனை பற்றி அப்துல்காலம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்துவாய் இருப்பதில் பெருமிதம் அடைவோம் ! இந்து மதத்தை வெளிநாட்டவர்கள் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவு கடவுள் துகள் என்ற கண்டுபிடிப்பை கண்டுபிடித்தற்காக அவர்களுக்கு இயற்பியலுக்கு இந்த வருடம் நோபல் பரிசு கிடைத்துள்ளது. கடவுள் துகள் என்ற ஆராய்சியில் உலகத்திலிருந்து மொத்தம் 30 இலட்சம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர் இந்தியாவில் அப்துல் கலாம் உட்பட இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான் அதன் அடிப்படையில் அண்டார்டிக்காவின் அருகில் உள்ள பகுதியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக ஏற்றுக் கொண்டனர் உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ள கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் ஏனெனில் இந்த ஆய்வை மேற்க்கொள்ள பூமிக்க பல கோடி மீட்டர் கொண்ட ஆழம் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர் உடனடியாக 30 இலட்சம் விஞ்ஞானிகளில் ஒருவான அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், அதன் ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது மேலும் தமிழ் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார் விஞ்ஞானிகள் 1978 ஆம் ஆண்டுதான். அணுவையே கண்டறிந்தனர் அதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தை படைத்தது சிவபெருமான் தான் அந்த சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார் அங்கே சிவபெருமான் நடனமாடுவதை போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர் . அண்ட பிரமாண்ட கோடி ஆளும் நாயகன் மலரடி போற்றி !

Tuesday, November 12, 2013

Mangalyan

இந்தியா வறுமை நாடு .இங்கு உள்ளவர்களுக்கு உணவு இல்லை, இருப்பிடம் இல்லை, உறங்க இடமில்லை,சுகாதார வசதி இல்லை. ஏழை நாட்டுக்கு செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா, மனிதன் வாழ முடியுமா என்று தெரிந்து என்னாகப்போகிறது என்று கிண்டல் செய்தனர் முன்னாள் விஞ்ஞானிகள் சிலர். இப்போது இந்த மங்கல்யான்   திட்டத்திற்காக 450 கோடி  ருபாய் செலவு செய்ய வேண்டுமா?


 இதற்கு என்ன பதில் ? 

சில ஆண்டுகள்  பினோக்கி செல்வோம்.

நம் நாட்டில் ஊழல் இல்லாத துறையே கிடையாது.

ஊழல் செய்யாத அரசியல்வாதிகளே கிடையாது. 

 வருடம் வாரியாக இடம் பெற்றுள்ள ஊழல் பட்டியல் SCAM LIST 



1948 முதல 2003 வரை  மட்டும் ரூபாய் 91,06,03,23,43,00,000
2003 முதல் 2013 வரை மட்டும்  ரூபாய்  ????????????????????????????????????????
முந்தையதை விட இரு மடங்கு

தொலை காட்சி விவாதம் நடைபெற்ற மற்றும் அனைவரும் அறிந்த சில

1. 2G Spectrum Scam

2. Commonwealth Games Scam

3. Telgi Scam

4. Satyam Scam

5. Bofors Scam

6. The Fodder Scam

7. The Hawala Scandal

8.  IPL Scam

9,10) Harshad Mehta & Ketan Parekh Stock Market Scam


இப்படி நம் நாட்டின் மானத்தை ஒவ்வொரு நாளும் உலக அரங்கில் கப்பலேற்றிக்கொண்டிருக்கும் நம் அரசியல்வாதிகளை விட கோடி மடங்கு 
நம் விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

தமிழ் நாட்டில் 

ஒரு  மாதத்திற்கு நம்முடைய 

குடிமகன்கள் 2000 கோடி ரூபாய்க்கும்

அதிகமாக குடித்து ஒழிக்கிறார்கள்.


 
இன்னொரு பக்கம் வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பலன் கிடைக்கிறது. விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில், விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான சாதனங்களை தயார் செய்வது போன்ற விஷயங்களுக்கான உலக சந்தை மதிப்பு என்ன தெரியுமா? 18 லட்சம் கோடி ரூபாய். இந்த சந்தையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டும் தான் இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

அதனால் 450 கோடி செலவு வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்

Monday, November 4, 2013

TRUST



நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் , நாம் என்ன நினைக்கிறோம் , ஆஹா நாம்

ஜெயித்து விட்டோம் என்று , அனால் உண்மையில் நாம் ஒருவரை

உருவாக்கிகிறோம் நம்  சந்ததியை அழிக்க


இப்படியும் கூறலாம்


நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் , நாம் என்ன நினைக்கிறோம் , ஆஹா நாம்

ஜெயித்து விட்டோம் என்று , அனால் உண்மையில் அவர் உன்னை அந்த

அளவிற்கு நம்பி இருகிறர் என்று அர்த்தம்

TRUST நம்பிக்கை ஏமாற்றுதல் CHEAT
INSPIRATional  QUOTES, TAMIL QUOTES

Wednesday, October 30, 2013

TRUE

TRUE

மிகக் கடினமானவை மூன்று!
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.

நன்றி காட்டுவது மூன்று!
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்று!
1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்று!
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று!
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று!
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

Sunday, October 27, 2013

Co-op Tex

எப்படியும் புது ஆடைகள் எடுக்கத்தான் போறீங்க..

500 ரூபாய் சேலையை 1500 ரூபாய்க்கு விற்கும் (நடிகர்கள் & விளம்பரங்களுக்கு யார் குடுப்பாங்க!) இன்றைய பண்டிகை சூழலில்.. நமது பணம் உரியமுறையில் செலவளிக்கப்படுவது இன்பம்!

எனவே அனைவரும் ஒரு சேலையையாவது சட்டையையாவது கோ-ஆப்-டெக்ஸ் ல வாங்குங்க மக்கா!

அதுவும் இந்த முறை முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயம் அவர்கள் தற்போது எம்.டி.ஆக.. பேக்கேஜிங் முதல் டிசைன்கள் வரை பலவித புதுமைகளை புகுத்தியுள்ளார் என்பதை நேரில் அறியமுடிந்தது! அதுவும் கோரா காட்டன் சாரிகள் செம! அவசியம் கூட்டுறவுத்துறைக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்க!

பல ஆண்டு நஷ்டத்திற்குப்பின் முதல் முறையாக சென்ற ஆண்டு இலாபம் ஈட்டியிருக்கும் இந்நிறுவனத்தை ஆதரிப்பது நமது கடமை! அந்நிறுவனம் ஈட்டிய ஒரு கோடி ரூபாய் இலாபத்தை தினமும் ரூ 65 க்கு உழைக்கும் ஏழை நெசவுத் தொழிலாளிகளுக்கு இலாபப்பங்கு மூலம் பிரித்துக்கொடுத்திருக்கிறார் திரு சகாயம் இ.ஆ.ப அவர்கள்.

நமது பணம் யார் கைக்கு செல்கிறது என்பதும் முக்கியமானதுதானே!

Wednesday, October 23, 2013

PRIBE

லஞ்ச புகார் தெரிவிக்கணுமா...? 

உடனே டயல் பண்ணுங்க காலம் காலமாக மாறாத விஷயங்களில் லஞ்சமும் ஒன்று. யார் ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சத்தை மட்டும் ஒழிக்க முடியவில்லை. பொதுவாக அரசு துறைகளில்தான் அதிகப்படியான லஞ்சம் அரங்கேறுகிறது. ஒரு சின்ன வேலை செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள். நீங்களும் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டவரா... லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டவரா... எங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்பது பற்றி புகார் கொடுங்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நிச்சயம் நல்ல நடவடிக்கை எடுக்கும். 

இதற்காக லஞ்ச ஒழிப்பு துறையை அணுகுவது வெகு சுலபம். புகார்தாரர்கள் நேரடியாகவும், இணைதளத்தின் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம்..... நீங்களும் புகார் அனுப்ப வேண்டுமெனில் லஞ்ச ஓழிப்பு துறை இயக்குனரகம், என்பிசி 21 மற்றும் 28பி, எஸ்.குமாரராஜா சாலை, (கிரீன்வேஸ் சாலை), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்ற முகவரியில் எழுதி அனுப்பலாம். அல்லது 044&24615989, 24615949, 24615929 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.dvac.tn.gov.in புகார்களை பதிவு செய்யலாம்.

Saturday, October 19, 2013

Quote of the Day


மக்கள் நீங்கள் அவர்களுக்கு செய்த நன்மைகள், தீமைகள்
இரண்டையும் எழிதில் மறந்து விடுவார்கள் 


மக்கள் நீங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த நல்ல 
பண்புகள்  மற்றும் எண்ணங்களையும் எழிதில் மறந்து 
விடுவார்கள் 


ஆனால் நீங்கள் அவர்களை உணர வையுங்கள், சிந்திக்க 
வையுங்கள் 

இப்போது என்றும் நினைவில் இருப்பீர்கள் 






IFSC Code

அனைத்து வங்கிகளின் IFSC கோடு வங்கிகள்

http://www.ifscswiftcodes.com/Bank-SWIFT-Codes/

Friday, October 18, 2013

Tamil Meaning

ஆங்கில வணிக சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள். நிறுவன / கடை உரிமையாளர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்! 

1 டிரேடரஸ் - வணிக மையம், TRADERS
2 கார்ப்பரேஷன் - நிறுவனம், Corporation
3 ஏஜென்சி - முகவாண்மை , Agencies
4 சென்டர் - மையம், நிலையம், Centre
5 எம்போரியம் - விற்பனையகம் , Emborium
6 ஸ்டோரஸ் - பண்டகசாலை, Stores
7 ஷாப் - கடை, அங்காடி
8 அண்கோ - குழுமம்
9 ஷோரூம் - காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் - பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி - சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் - போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் - மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் - சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் - பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் - நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் - மரக்கடை
18 பிரிண்டரஸ் - அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் - மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் - வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் - இனிப்பகம்
24 காபி பார் - குளம்பிக் கடை
25 ஹோட்டல் - உணவகம்
26 டெய்லரஸ் - தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் - துணியகம்
28 ரெடிமேடஸ் - ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் - திரையகம்
30 வீடியோ சென்டர் - ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் - நிதியகம்
33 பேங்க் - வைப்பகம்
34 லாண்டரி - வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் - உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் - வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் - உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் - குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் - கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் - கல்நார்
41 ஆடியோ சென்டர் - ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ - தானி
43 ஆட்டோமொபைலஸ் - தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் - தானிப் பணியகம்
45 பேக்கரி - அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் - மின்கலப் பணியகம்
47 பசார் - கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் - அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் - மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் - நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் - உண்டுறை விடுதி
52 பாய்லர் - கொதிகலன்
53 பில்டரஸ் - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் - கம்பிவடம், வடம்
55 கேபஸ் - வாடகை வண்டி
56 கபே - அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் - பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் - சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் - பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் - வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் - சீட்டு நிதி
62 கிளப் - மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் - மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் - குளம்பியகம்
65 கலர் லேப் - வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி - குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் - வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் - கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் - திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் - கூட்டு நிறுவனம்
71 கூரியர் - தூதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் - வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் - மிதிவண்டி
74 டிப்போ - கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் - ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் - உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் - மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் - மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் - விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் - முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் - மிதிவண்டியகம்
82 பேக்டரி - தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் - புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் - விரை உணா
85 பேகஸ் - தொலை எழுதி
86 பைனானஸ் - நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் - உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் - முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் - வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி - நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் - வண்ண அச்சகம்
93 லாட்ஜ் - தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் - சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் - நலம் பேணகம்
96 பேஜர் - விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் - தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் - கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் - கன்னெய், எரிநெய்
102 பார்மசி - மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ - ஒளிப்பட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி - நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் - குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் - ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் - பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் - விசைத்தறி
109 பவர் பிரஸ் - மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் - அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் - தாவளம், உணவகம்
112 ரப்பர் - தொய்வை
113 சேல்ஸ் சென்டர் - விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் - வணிக வளாகம்
115 ஷோரூம் - காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் - பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி - வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி - மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் - வங்குநர்,
120 ஸ்டேஷனரி - தோல் பதனீட்டகம்
121 டிரேட் - வணிகம்
122 டிரேடரஸ் - வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் - வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் - பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் - தேனீரகம்
126 வீடியோ - வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் - பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் - படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே - ஊடுகதிர்

-தூய தமிழ்ச்சொற்கள்

Thursday, October 17, 2013

Tamilnadu Important Phone Numbers

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...!

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும் !

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே

8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/

9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும் ! நன்றி ! வாழ்க வளமுடன் !

Wednesday, October 9, 2013

மின்சாரம் இல்லையென்றால்

மின்சாரம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..

// பயனுள்ள தகவல் //

மாலை வீடு திரும்பியவுடன் , வீட்டில் மின்சாரம் இல்லை. மகளிடம் விசாரித்தேன், மூன்று முறை இதுவரை அறிவிக்கப்படாத மின்வெட்டு என தெரிந்துகொண்டு, காலாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மகளுக்கும் பயனுள்ளதா ஏதாவது கற்றுக்கொடுக்கலாமே என்று முடிவுசெய்தேன்.

155333 டயல் செய்ய சொல்லி , தமிழில் தகவல் அறிய எண் ஒன்றை அழுத்தவும் என்ற குரலுக்கு ஏற்ப அழுத்திவிட்டு காத்திருந்தாள். அந்தபக்கம் வழக்கமா பேசக்கூடிய நபர் , இன்னும் அரைமணி நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என சொல்லிவிட்டு டொக்கென்று வைத்துவிட்டார். மறுபடியும் ஃபோன் போட சொன்னேன். புகார் எண் கண்டிப்பாக வேண்டும் என கூறியவுடன்தான் நம் முகவரியையே கேட்க ஆரம்பித்தார். சொன்னபடியே அரைமணிநேரத்தில் மின்சாரமும் வந்தது.

நமக்கு மின்வெட்டு ஏற்பட்டாலே சலித்துக்கொள்கிறோம். நமது கடமை, உரிமை என்னவென்றே தெரியாமல் புலம்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளோம். அறியாமையை ஒழிப்போம், விழிப்புணர்ச்சி பெறுவோம்.

இனி மின்வெட்டு ஏற்பட்டால் நீங்கள் டையல் செய்யவேண்டிய எண் 155333, மறவாமல் புகார் எண்ணையும் கேட்டுவாங்கி குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்

http://youtu.be/7TByE86yrt8

Saturday, September 21, 2013

பேராசை


பேராசை முடிகிற இடத்தில் 

சந்தோஷம் தொடங்குகிறது 


Friday, September 13, 2013

விவேகானந்தர் பொன் மொழிகள்



பணக்காரணாக வேண்டுமானால் உழைப்பாளியாய் இரு

புகழ் பெற வேண்டுமானால் உண்மையாய் இரு 

நண்பர்களை பெற வேண்டுமானால் தாராள மனப்பான்மையுடன் இரு 

மெய்யறிவு பெற வேண்டுமானால் தர்ம சிந்தனையுடன் இரு 

வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால் நாவடக்கத்தோடு இரு 

- விவேகானந்தர் பொன் மொழிகள் 


Thursday, September 12, 2013

சமுதாய அக்கறை

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் :
******************************************

அவசர உதவி அனைத்திற்கும்————–911
வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
போலீஸ் SMS :- ———————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
போலீஸ் : —————————————–100
தீயணைப்புத்துறை :—————————-101
போக்குவரத்து விதிமீறல——————–103
விபத்து :——————————————–100, 103
ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
கண் வங்கி அவசர உதவி : ——————-1919
விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.