Showing posts with label கசக்கும். Show all posts
Showing posts with label கசக்கும். Show all posts

Saturday, February 6, 2016

பொன்மொழிகள்

ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவமே இல்லை

மௌனமாக தியானம் செய்தால் மனம் கலங்காத நிலை பெறும்

ஒரு செயலை , காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதே இன்பம்

உங்களை நீங்களே நல்லவர்களாக நினைத்து கொள்வதே மகழ்ச்சி

நமது எண்ணம் தான் வாழ்க்கை,  நமது வாழ்க்கை தான் அதன் பிம்பம்

துன்பங்கள் தான் மனிதனுக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றன

குற்றங்கள் செய்தவன் பயந்து சாகிறான் அதுவே அவனுக்கு தண்டனை


காலம் நல்லதெனில் கூட்டம் இனிக்கும் காலம் கேட்டதெனில் அதுவே கசக்கும் 

காலத்திற்குப் பாகுபாடு கிடையாது.  யார் மீதும் அதற்கு பாரபட்சம் இல்லை

மூடன் இறுதியில் செய்வதை அறிவாளி ஆரம்பத்திலேயே செய்து விடுகிறான்

செய்த தவறை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு சமம்



நேற்றைய கவலைகளை பற்றி இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கதீர்கள்

உறுதி, இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூடக் கடினம்



ஒருவனுக்கு துன்பம் செய்து விட்டு நீ நிம்மதியாக இருந்து விட முடியாது

பொறுமை என்ற காய் கசப்பு ஆனால் அது கனியும் போது இனிப்பாயிருக்கும்




நல்ல புத்தகங்கள் இல்லாத வீடு,ஜன்னல்கள் இல்லாத ஓர் அறைக்குச் சமம்