Saturday, April 10, 2021

sivam dr


 

Saturday, March 27, 2021

இணைக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல்

 Alert: இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்க! உடனடியாக இதை செய்யுங்கள்!


வங்கி வாடிக்கையாளர்களுக்கு (Bank Customers) இது முக்கியமான செய்தி. ஏப்ரல் 1, 2021 முதல், இந்த எட்டு வங்கிகளின் பழைய காசோலை புத்தகம் (Old Cheque Book) இயங்காது. பழைய காசோலை புத்தகம் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு (IFSC Code) செல்லாது. உங்கள் பழைய காசோலை புத்தகம் ஏப்ரல் 1 முதல் வேலை செய்வதை நிறுத்திவிடும். எனவே இந்த எட்டு வங்கிகளில் ஏதேனும் உங்களிடம் கணக்கு இருந்தால், உங்கள் காசோலை புத்தகத்தை சரியான நேரத்தில் மாற்றவும்.


காசோலைகள் (Cheque Book) வங்கிகளால் நிராகரிக்கப்படும், ஏனெனில் அவற்றின் கணக்கு எண் (Account Number) மாற்றப்படும். எனவே, இந்த வங்கியின் (Bank) அனைத்து காசோலைகளும் செல்லாததாகிவிடும். எனவே, இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு புதிய காசோலை புத்தகத்தை பெற வேண்டும்.


எந்த வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

மத்திய அரசு பல வங்கிகளை ஒன்றிணைத்துள்ளது. வங்கிகளில் அதிகரித்து வரும் என்.பி.ஏ சுமையை கருத்தில் கொண்டு, அரசாங்கம் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு மத்திய அரசு இந்த வங்கிகளை ஒன்றிணைத்தது. இப்போது இணைப்புக்குப் பிறகு, உங்கள் வங்கிகளில் உங்கள் கணக்கு எண்,  IFSC குறியீடு மற்றும் பாஸ் புக் போன்றவை மாறப்போகின்றன. இப்போது, ​​இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது புதிய காசோலை புத்தகம், பாஸ் புக் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். 


தேனா வங்கி, விஜயா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, ஆந்திர வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி (Allahabad Bank) ஆகியவற்றின் காசோலை புத்தகங்கள் 2021 ஏப்ரல் 1 முதல் செல்லாது.


இணைப்புக்குப் பிறகு, இந்த வங்கிகளின் காசோலை புத்தகங்கள் 31 மார்ச் 2021 க்குப் பிறகு செல்லாது என்று கருதப்படும்.


இணைக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல் -


தேனா வங்கி (Dena Bank) மற்றும் விஜய வங்கி (Vijaya Bank) ஆகியவை பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் (Bank of Baroda) இணைக்கப்பட்டுள்ளன.

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (PNB) இணைக்கப்பட்டுள்ளன.

சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் (Indian Bank) இணைக்கப்பட்டுள்ளது.


இவை அனைத்தும் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.

முதியோர் இல்லத்தின்' முகவரி

 நாமெல்லாம் எங்கேயோ

தோத்துட்டோம்,.  


மனித நேயம் பயிலாத

கல்வி என்ன கல்வியோ?


அம்மா..வயசானவங்களை 

பாத்துக்கிற இடம் இங்க இருக்குன்னு சொன்னாங்க அது எங்கன்னு..."


75 வயதை தாண்டிய பெரியவர் எங்கள் வீட்டின் முன் நின்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.


அவர் கேட்பது 'முதியோர் இல்லத்தின்' முகவரி! அது எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் ன் உள்ளது.


பாவம் வழி மாறி வந்திருக்க கூடும்.

நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பார் 

போல! களைத்திருந்தார்! .


ஐயா நீங்க யாரு? யாராவது அங்கிட்டு இருக்காங்களா? அவங்களை பாக்க வந்திங்களா? இந்த வயசுல இப்படி தனியா வந்திருக்கிங்க" அம்மா கேட்டார்.


எந்த கேள்விக்கும் பதிலில்லை.


மௌனமாக நின்று இருந்தார்.

அம்மா ஏதோ புரிந்துகொண்டார்.


ஐயாவுக்கு எத்தனை புள்ளைங்க?"


மூணு ஆம்புள புள்ளைங்க, ரெண்டு பொம்பள புள்ளை! கைவிரல்களை காட்டினார்.


அவங்க யாரும் உங்களை பாத்துக்கில்லையா?"


மீண்டும் அதே கனத்த மௌனம்.


ஐயா தப்பா நினைக்காதீங்க, இப்படி 

தனியா போனா அங்க சேத்துப்பாங்களான்னு தெரியல! உங்க புள்ளைங்க இல்லனா சொந்தகாரவுங்க யாராச்சும் வரணும்னு சொல்வாங்க"என்றார் அம்மா.


அம்மா நீங்க அந்த இடத்தை மட்டும் காட்டுங்க, நான் அவங்க கால்ல விழுந்தாவது...." 


வார்த்தை வாயில் இருக்கும் போதே அவருக்கு கட கட கண்ணில் நீர் முட்டியது.அவரது தோளில் 

கிடந்த  துண்டை கண்ணில் 

ஒற்றிக்கொண்டு சிறிது நேரம் விசும்பினார்.


அம்மாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.


ஐயா..கலங்காதிங்க..கலங்காதிங்க!" பதறியடித்து தேற்றினார்.


எத்தனை தேற்றினாலும் விசும்பல் அடங்கவில்லை! பல வருட அழுகை போல!! 


கொஞ்ச நேரத்தில் அவரே 

தேற்றிக்கொண்டு ஆசுவாசமானார்.


ஐயா கலைச்சு இருக்கிங்க டீ , காபி ஏதாது சாப்பிடறீங்களா?" கரிசனுத்துடன் அம்மா கேட்டார்.


வேண்டாம்' என்று தலையசைத்தார்.

ஒரு கனத்த மௌனத்திற்கு பிறகு,


கொஞ்சம் தண்ணி..." என்றார்.


தண்ணீர் குடித்த உடன் அம்மாவை 

இரு கரம் கூப்பி வணங்கினார்.


ஐயா ரொம்ப தளர்ந்து இருக்கிங்க.அவ்ளோ தூரம் நடக்க வேணாம்.இருங்க பையன உங்களை பைக்கல கொண்டு விட சொல்றேன்." 


அண்ணனை அழைத்து, " கண்ணு, ஐயாவை முதியோர் இல்லத்துல கொண்டு விட்டுரு! பைக்க மெதுவா ஓட்டிட்டு போ" என்றார்.


என் கை பிடித்து பெரியவர் 

அண்ணனின் பின் அமர்ந்தார்.


தக்கையான வலுவிழந்த உடல், 

சக்கையாய் காய்ந்த விரல்கள், அவரின் உள்ளங்கை சில்லென்று இருந்தது.


ஐயா கவலை படாதிங்க! வீட்ல 

பாத்துக்கிற மாதிரியே உங்கள 

அங்க நல்லா கவனிச்சுபாங்க" 

ஆறுதலுக்கு கூறினார் அம்மா. 


பெரியவரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.துண்டில் ஒற்றாமல் விட்டுவிட்ட ஒரு துளி கண்ணீர் அவர் கண்களிலேயே தேங்கி நின்றது. 


வண்டி மெதுவாக நகர்ந்து சென்றது.

அம்மாவும் நானும் வண்டி சென்ற திசையையே சிறிது நேரம் பார்த்து 

கொண்டு நின்றிருந்தோம்.


இனிமேல் அந்த பெரியவரின் எதிர்காலம் என்னவென்று எனக்கு தெரியவில்லை! 


இந்த சமூகத்திற்கு சொல்லிவிட 

என்னிடம் பெரிதாக ஒன்றுமில்லை.

 

இருந்தாலும், 


சார், நாமெல்லாம் எங்கேயோ 

தோத்துட்டோம் சார்!".


மனதை கலங்கடித்த பதிவு.

Sunday, August 14, 2016

எண்ணம்

நல்ல தருணம் இரண்டு முறை உன் கதவை தட்டும் என்று எண்ணாதே 

அன்பு

அன்பு குறைந்து இருக்கும் போது சின்ன தும்மல் கூட பெரிய குற்றம் போல் தோன்றும் 

உதவி

மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விருபுகின்றயோ
அதை நீ அவர்களுக்கு செய் 

சுலபம்

சரி என்பதை செய் , சுலபம் என்பதால்  அல்ல / செய்யாதே

பயம்

பயத்தை வெல்லாவதன் , வாழ்வின் முதல் பாடத்தை கல்லாவதன்

Saturday, August 6, 2016

வாழ்க்கை தேடல்

வாழ்க்கை ஒரு தேடல்  ?  எப்படி

ஏழைகள் உணவை தேடுகின்றனர்
பணக்காரன் பசியை தேடுகின்றனர்




  

வாழ்க்கை தேடல்

வாழ்க்கை ஒரு தேடல்  ?  எப்படி

ஏழைகள் உணவை தேடுகின்றனர்
பணக்காரன் பசியை தேடுகின்றனர்

  

Sunday, June 26, 2016

வாழ்க்கை

வாழ்க்கை

உணவை தேடுகிறவன் ஏழை
பசியை தேடுகிறவன் பணக்காரன்



நம்பிக்கை

நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கள் என்றும் அழிவதில்லை

Saturday, April 16, 2016

சிந்தனை

கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்க முடியும்

ஒரு செயலை செய்ய முடிவு எடுப்பது கடினம் அதை விட
அந்த செயலில் ஏற்பட்ட தவறுகளை திருத்துவது கடினம்
எனவே ஒரு செயலை செய்ய  முடிவு எடுக்கு முன் இரு
முறை  சிந்தனை செய்யுங்கள்

கடமை


பிறரை சீர்திருத்தும் கடமையை விட 

தன்னைச் சீர்திருத்துவதே 

முதன்மையான  கடமையாகும் 
  

Wednesday, March 2, 2016

தமிழ்-தத்துவம்

முடிந்ததை செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் வெற்றி

கடனுக்கு வாங்குவதை விட விலைக்கு வங்கி விடுவது மேல்

குற்றங்களில் பெரிய குற்றம் தன்னிடமுள்ள குற்றங்களை திருத்த முயலாமல் இருபதுதான்

தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்

வெற்றி என்பது அவரவர் எண்ணுகிற எண்ணத்தை பொறுத்தே கிடைக்கிறது

Saturday, February 6, 2016

பொன்மொழிகள்

ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவமே இல்லை

மௌனமாக தியானம் செய்தால் மனம் கலங்காத நிலை பெறும்

ஒரு செயலை , காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதே இன்பம்

உங்களை நீங்களே நல்லவர்களாக நினைத்து கொள்வதே மகழ்ச்சி

நமது எண்ணம் தான் வாழ்க்கை,  நமது வாழ்க்கை தான் அதன் பிம்பம்

துன்பங்கள் தான் மனிதனுக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றன

குற்றங்கள் செய்தவன் பயந்து சாகிறான் அதுவே அவனுக்கு தண்டனை


காலம் நல்லதெனில் கூட்டம் இனிக்கும் காலம் கேட்டதெனில் அதுவே கசக்கும் 

காலத்திற்குப் பாகுபாடு கிடையாது.  யார் மீதும் அதற்கு பாரபட்சம் இல்லை

மூடன் இறுதியில் செய்வதை அறிவாளி ஆரம்பத்திலேயே செய்து விடுகிறான்

செய்த தவறை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு சமம்



நேற்றைய கவலைகளை பற்றி இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கதீர்கள்

உறுதி, இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூடக் கடினம்



ஒருவனுக்கு துன்பம் செய்து விட்டு நீ நிம்மதியாக இருந்து விட முடியாது

பொறுமை என்ற காய் கசப்பு ஆனால் அது கனியும் போது இனிப்பாயிருக்கும்




நல்ல புத்தகங்கள் இல்லாத வீடு,ஜன்னல்கள் இல்லாத ஓர் அறைக்குச் சமம்













Wednesday, February 3, 2016

தன்னம்பிக்கை







தன்னம்பிக்கை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான்
நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பை போன்றது அது திரும்பி வராது
ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை ஆகும்
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கண்கள்
அறிவை விட புனிதமான ஆன்மா அதிகப் பலனை தரவல்லது

Saturday, January 16, 2016

தமிழ் கோட்ஸ்

நல்ல நண்பன் இல்லாதவன் பெரும் அதிர்ஷ்டம் இல்லாவதன்
உழைப்பு எந்த மனிதனையும் அவமானப்படுத்தாது
எதையும் ஊடுருவிப்பார் எதிலும் ஒரு சிறப்பான நல்ல குணம் இருக்கும்
நல்ல முறையில் வாழ்பவரே போதிய அளவு கற்றவராவர்
அமைதியாக இரு, நீ எவரையும் வசபடித்திகொள்ள முடியும்
உறுதியைப் போல் உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்
நீங்கள் கேள்விப்பட்டதால் மட்டும் எதையும் நம்பி விடாதீர்கள்